Shiva bhujangam slokam 17




                                   त्वदक्ष्णोः कटाक्षः प्रतेत्त्र्यक्ष यत्र
                            क्षणं क्ष्मा च लक्ष्मीः स्वयं तं वृणाते ।
                                किरीटस्फुरच्चामरच्छत्रमाला-
                                कलाचीगजक्षौमभूषाविशेषैः ॥ १७ 


                  த்வதக்ஷ்ணோ​: கடாக்ஷ​: ப்ரதேத்த்ர்யக்ஷ யத்ர
            க்ஷணம் க்ஷ்மா ச லக்ஷ்மீ​: ஸ்வயம் தம் வ்ருணாதே | 
                      கிரீடஸ்புரச்சாமரச்சத்ரமாலா-
                  கலாசீகஜக்ஷௌமபூஷாவிஸேஷை​: ||  17 ||   



त्रयक्ष= முக்கண்ணனே त्वदक्ष्णोः= உன் இரு கண்களுடைய त्वदक्ष्णोः=
கடாட்சமானது यत्र = எவனிடம் क्षणं = சிறிது நேரமாவது      पतेत् =
விழுமோ तं = அவனை क्ष्मा च = பூதேவியும் लक्ष्मीः च =  ஸ்ரீ  தேவியும் 
स्वयं = தாங்களாகவே किरीट = மகுடம் स्पुरच्चामर  = பிரகாசிக்கின்ற 
சாமரங்கள் छत्र = குடை माला  = ரத்னமாலைகள் कलाची = களாஞ்சி गज = யானைகள் क्षौम = பட்டு भूषाविशेषैः= சிறந்த ஆபரணங்கள் 
இவைகளுடன் वृणाते =வரிக்கிறார்கள் .


       இங்கு பரமேச்வரனுடைய  கருணா      டாக்ஷத்தின்  
மஹிமை  வர்ணிக்கப்    படுகின்றது .    பரமேச்வரன் மூன்று கண்களை   உடையவன்  . மூன்றாவதான நெற்றிக்கண்  துஷ்டர்களை அழிப்பதற்காக ஏற்பட்டது  .
அதனால் நெற்றிக்கண்ணின்பார்வையை  பக்தர்களிடம் 
செலுத்துவதில்லை .மற்ற இரு கண்களின்  கடாக்ஷம் எவன்  
மேல் விழுகின்றதோ அவனே சகல  ஐஸ்வர்யங்களையும்
பெறுகிறான் . இந்த அகண்ட பூமண்டலமனைத்திற்கும் 
அவனே சக்ரவர்தியாகிறான்  லக்ஷ்மீ தேவியும் அவனையே 
வரிக்கின்றாள் .இவ்விரு தேவியர்களும் கிரீடம் ,சத்ரம் ,
சாமரம் ,ரத்னமாலைகள் , வாஹன விசேஷங்கள் ,பட்டாடைகள், ஆபரணங்கள்  இவைகளுடன் அவனையே 
வந்தடைகின்றனர் . ஆதாலால் அனைவரும் 
பரமேச்வரனுடைய கருணா கடாக்ஷத்திற்குப்  
பாத்திரமாகவேண்டுமென்பது  இதனால்  விளக்கப் 
படுகின்றது .



Slokams: with thanks to Sringeri Sri Sarada Peetham.



   

    

Comments