Shiva Bhujangam slokam 15



         
                                  शिरो दृष्टिहृद्रोगशूलप्रमेह-
                         ज्वरार्शोजरायक्ष्महिक्काविषार्तान् ।
                            त्वमाद्यो भिषग्भेषजं भस्म शंभो
                            त्वमुल्लाघयास्मान्वपुर्लाघवाय ॥


                   சிரோ த்ருஷ்டிஹ்ருத்ரோகசூலப்ரமேஹ-
            ஜ்வரார்சோஜராயக்ஷ்மஹிக்காவிஷார்தாந் 
             த்வமாத்யோ பிஷக்பேஷஜம் பஸ்ம சம்போ
              த்வமுல்லாகயாஸ்மாந்வபுர்லாகவாய ௧௫


       शम्भो = சம்புவே , त्वं = நீ , आद्य : முதல்வனான  भिषक्  = 
வைத்யன் भस्म = விபூதியே भेषजम् = மருந்து(ஆகையால் ) 
 त्वं = நீர் सिरोदृष्टिहृद्रोग = தலைநோய் , கண்நோய் , இருதய 
- நோய் सूल = வயிற்று வலி , प्रमेह =சிறுநீர் பெருக்கு 
ज्वर = காய்ச்சல் अर्श = மூலரோகம் जरा = மூப்பு यक्ष्म = காச 
-நோய் हिक्का = விக்கல் विष = விஷம் இவைகளால் 
आर्तान् = பீடிக்கப்பட்ட எங்களை पुन =  மறுபடியும் 
वपुर्लागवाय= தேஹத்தில் ஸாமர்த்தியம்  ஏற்பட त्वं = நீர் 
वुल्लाघय = ஸ்வஸ்தப்படுத்துவாயாக. 

  உலகில் அநேகமாக எல்லோரும் ஏதாவது ஒரு 
வியாதியால் துன்புறுகின்றனர். அதிலும்  சில பெரிய 
வியாதிகள் வந்தால் சுலபமாக குணமாவதில்லை . 
வியாதிகள் வந்து உடலைப் பீடித்துக்கொண்டிருந்தால் அவன் ஒரு  காரியமும் 
செய்ய முடியாது.  உடலில்  லாகவம்  இருக்காது.பலம்  
எல்லாம் போய்விடும் . அந்நிலையில் அவன் எப்படி 
சிவபூஜை , சிவத்யானம் முதலியவைகளை செய்ய 
முடியும் .அதனால் ஈசுவரனிடம் வேண்டுகிறார் : என் 
சரீரத்திலுள்ள  ஒரு அவயத்திலாவது ஒரு வியாதியும்   
 இருக்கக் கூடாது . ஏதாவது வியாதி இருந்தால் அது
உடனே நீங்க வேண்டும் . மேல் கொண்டு வியாதி 
ஒன்றும் வராமல் சரீரம் பூர்ண ஆரோக்கியத்துடன்
இருக்கும்படி  அனுக்ரஹம் செய்ய வேண்டும் (என்று ).
விஷ உபாதையும் மூப்பும்கூட ஏற்படக்  கூடாது என்று 
கேட்கிறார் . வியாதியுள்ளவன் தன் பிணி  நீங்க 
வைத்யனைத் தேடிச் செல்வது வழக்கம் . அந்த 
வைத்யனிடம் இவன் வியாதியைப் போக்கும் மருந்து 
இருந்தால்தான் அவன் குணப்படுத்த முடியும் .
அதற்காகக் கூறுகிறார் - " நீரே முதன்மையான  
வைத்யர். உம்மிடமுள்ள பஸ்மம் ஸகல வியாதிகளையும் போக்கும் சிறந்த மருந்து ". 
"प्रथमो दैव्यो भिषक् " भिशक्तमं त्वां  भिषजां  शृणोमि " என்று 
வேதமானது பரமேசுவரனை முதல் வைத்யராகவும்
வைத்யர்களுக்குள் மிகச் சிறந்தவராகவும்  கூறுகிறது 
இந்த சுலோகத்தை ஜபித்து விபூதியை உடலில் 
பூசிக்கொள்வதாலும் உட்  கொள்வதாலும் தலைவலி
கண்வலிமுதலிய ஸகல ரோகங்களும் நீங்கும் . 
உடலில் வலிமையும் , பொலிவும் உண்டாகும். 
Sri Patteeswarar & Goddess Pachainayagi  of Perur temple near coimbatore ( Tamil Nadu )Photo courtesy:Dinamalr magazine.Thanks to Sri Sringeri Sarada peetham for the Sanskrit & Tamil texts.



Comments